पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/६९

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

6. இந்தத் தேவனை யறியாமே பலர், இயற்கையே உலகுக்குக் காரணமென்றும், காலம் காரண மென்றும், மற்றும் பலவித மாகவும் பேசி வருகின்றனர். எல்லாம் எம்பெருமானின் விபூதியாம். அவனுடைய ஸங்கல்ப்பத்தாலே பஞ்சபூதங்களும், அவற்றிற்கு முன்னும் பின்னுமான கார்யங்களும் உண்டாகின்றன. அவனுக்கு ஆராதனங்களாக எல்லாச் செயல்களையும், செய்து கொண்டு அவனுக்குத் தான் சேஷனென்பதைச் செவ்வனே யறிந்து அனு பவிக்கவேண்டு மவற்றை யனுபவித்துவிட்டு அந்த ப்ரம்மத்தை யடைகிறான். அந்த ப்ரம்மத்தை விட ஜீவன் வேறாவான். ப்ரக்ருதி, காலம் , ஜீவன் என்பவற்றிற்கு மேலாய் ப்ரபஞ்சகாரணமாய் பாவங்களைப் போக்குகின்றவனும் ஆத்மாவில் வசித்து வருபவனும் ஈச்வார்களுக்கும் எல்லோர்க்கும் மேலான ஈச்வானும் , தேவதை களுக்கெல்லாம் மேலான தேவதையும், ஸர்வசேஷியும், கர்மா தீனங் களான காயமும் கருவிகளு மில்லாதவனுர் , ஒத்தார் மிக்கார் யாருமில்லாதவனும், இயற்கையாகவே பலவகை சக்தி, அறிவு, செயல் எல்லாம் உடையனும், எல்லாவற்றையும் நியமிக்கிறவனும் ஸத்வர ஜஸ்தமோகுணங்களுக்கு உட்படாதவனுமாவான் அவன். ஸாங்க்யம், யோகம் முதலான சாஸ்த்ரங்களில் கூறியபடி தன்னைப் போல் நித்யர்களும் சேதநர்களுமான பலருக்குத் தான் ஸகலபலன் களையு மளிப்பவனுமாய் கர்மயோக ஜ்ஞான யோகங்கள் வாயிலாக ஜீவாத்மாவினுள் அறியப்படுகிறவனுமான அந்த ஜகத்காரண புருஷனை யறிந்து பாசங்களினின்று விடுபட வேண்டும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல்கள், அக்னி போன்ற சோதி களெல்லாம் அவனெ திரில் ஒளி பெறா. அவனது அனுக்ரஹமும், அவன் திருமேனியொளியின் உதவியும் பெற்று அவை ப்ரகாசிக் கின்றன. உலகினில் மிகச் சிறந்து விளங்கும் அன்னமது. அலைகடலில் அழிவற்றிருக்கும் அக்னியது. ஜ்ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேசு என்ற குணங்கள் நிறைந்தவனும், ப்ரக்ருதி ஜீவர்களைக் கொண்டு, ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார மோக்ஷங் களை நடத்துகின்றவனும், தனக்கு மேல் ஈச்வரனொருவ னில்லாத வனுமான இவனே பிரமனை ஸ்ருஷ்டித்து, வேதங்களையு மவனுக்கு ஓதியவன். இப்படி ஆத்மாக்களுக்கு அறிவைக் கற்பிக்கும் பரம புருஷனை முமுக்ஷவாய் சரணமடைக. நிரவயவமானதாலே விருத்தி க்ஷயங்களைப் பொத்தாய், கர்மங்களுக்குட்படாததாய், பசி