पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७०

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

தாகம் போன்ற துன்பங்களுக்கு இடமாகாததாய், ஆச்ரிதர்களை யுபேக்ஷிக்கும் ஸ்வபாவ மில்லாததாய், பக்ஷபாதமற்றதாய், மோக்ஷமென்ற அக்கரை சேரக் கடல் கடக்கத் தக்க திடமான அணையாயுமுள்ள இந்தப் பரதேவதையை பறியாமே மோக்ஷம் போவதென்பதை, மனிதர்கள் வானத்தைத் தோலைப் போல் சுருளாகச் சுருட்டவியன்ற போது பெறலாம். அமூர்த்தமான ஆகாயத்தைச் சுருட்டுவது கூடுமோ? அது போல் அவனை யறியாது மோக்ஷம் பெற யாருக்குமாகாது. இப்படி ச்வேதா சவதரரென்பவர், தபோபலத்தாலும், தெய்வ அநுக்ரஹத்தாலும் ப்ரம்மத்தை யறிந்து ரிஷிகள் திரள் திரளாகப் பரிவுடன் அறிந்து கொண்டாடும் அதைப் பரமஹம்சர்கள் போன்ற பலருக்கு இவ்வாறு உபதேசித்தருளினார். தெய்வத்தினிடமும், குருவினிட த்திலும் துல்யமாய்ச் சிறந்த பக்தியுள்ள மஹாத்மாவுக்கே இவ்வர்த்தங்களெல்லாம் நன்கு விளங்கும். ச்வேதாச்வதரோபநிஷத்து முற்றிற்று. அதர்வசி கோபநிஷத்து அதர்வா என்பவரைப் பைப்பலாதர் முதலானோர் ஆச்சயித்துக் கேட்டனர். த்யானத்திற்கு மந்திரம் யாது! த்யானமாவது எது! த்யானா செய்பவன் யார்? த்யானம் செய்யப்படும் கத்துவம் யாது என்று. அதர்வாவும் உபதேசிக்கலானார் - த்யானத்திற்கு மந்தர மாவது ப்ரணவம். அது நான்கு பாதமுள்ளதாய் ப்ரம்மமாகும். அகார-2.கார் - மகாரங்களும், அவற்றின் மேல் அறை மாத்திரை யொன்று மாக நான்கு மாத்திரைகள். அவைகளே லோகங்க ளாகவும் வேதங்களாகவும் மற்றும் பல விதமாகவும் புகழப்படும். அடைவாக அவற்றிற்குத் தேவதைகளாவர் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், புருஷன் என்பர். இந்த ப்ரணவம் ஹஸ்வம், தீர்க்கம், ப்தமெனவும் பிரிக்கப்படும். இதற்கு ஓங்காரம், ப்பளயம், பணவம், தாரம், விஷ்ணு ப்ரம்மம், ப்ரகாசம், வித்யுத், மஹா தேவன் என்றவாறு பெயர்களு முன் . அப்பெயர்களுக் கேற்பப் பொருள்களும் உள. அதன் அத்தகைய மேன்மையை விளக்க