पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७६

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

13 கொண்டிருக்கிறது. மூர்ச்சையிலும் இவ்வாறு ஸூக்ஷ்மமாய் ப்ராணஸஞ்சாரமுண்டென்க. ப்ரஜ்ஞை யென்ற ஜீவனில்லாத போது ஓரிந்திரியமும் தன் வேலையை நடத்தவியலாது. எனவே விஷயங்களையும் அவற்றை அறியக் கருவிகளான இந்திரியங்களையும் ப்ராணனையும் விட வேறாய். ஜ்ஞாதாவும் கர்த்தாவும் போக்தாவு மாவான் ஜீவன். வண்டியின் வட்டைகள் இலைகளிலும், இலைகள் குடத்திலும் பதிய வைக்கப்பட்டிருப்பது போல் அசேதனங்க ளெல்லாம் சேதநங்களிடமும், சேதநங்கள் ஸர்வப்ராணனான பரமாத்மாவினிடமும் அவன் தன்னாலே பதியவைக்கப்பட்டிருக்கிற னவெ வறிக. இப்படி ப்ராணனும் ப்ரஜ்ஞாத்மாவுமான அவன் ஆனந்த ஸ்வரூபன்; மூப்பு, இறப்பு இல்லாதவன்; நல்வினைகள் செய்ததால் சிறப்பையடையவேண்டியவனுமல்லன்; தீவினைகளால் குறை படுகிறவனுமல்லன். யாவனொருவனை இவ்வுலகுகளினின்று உய் விக்கக் கருதுகின்றான், அவனை நல்வினையில் மூட்டுகிறான்; கீழே தள்ளி வைக்கக் கருதப்பட்டவனைத் தீவினைகளில் மூளச் செய் கிறான். இவனே உலகினைக் காப்பவன்; உலகுக்கு எசமான்; உலகினை நியமிக்கின்றவன். இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனம் செய்யவேண்டும்'. இவ்வாறுப்பதர்தனனுக்கு இந்திரன் உபதேசித்த ப்ரதநவித்யை ய்துவாம். 6 4. பாலாகி என்ற பிராம்மணன் லாங்க வேதாத்யயாம் செய்து சிறந்த ப்ரக்யாதி பெற்றிருந்தான். உசீநரம்,ஸத்துவ வகுணம் நிறைந்த மத்ஸ்யதேசம் இவற்றிலும், குரு பஞ்சால காசி விதேஹ தேசங்களிலும் வளித்துவந்தான். காசிராஜனான அஜாதசத்ரு என்பானிடம் வந்து, உமக்கு ப்ரம்மத்தைப் பற்றிச் சொல்லுகிறே னென்று சொன்னான். அஜாதசத்ரு, இந்த வார்த்தைக்கே உமக்கு ஆயிரம். பசுக்களை தானம் செய்கிறேன். ஜாகர் ஜநகர் என்றன்றோ எல்லோரும் ஓடுவது என்றான். பிறகு பாலாகி, ஆதித்யனிடமுள்ள புருஷனை நான் உபாஸிக்கிறேனென்றான். அஜாதசத்ரு, 'இது விஷயத்தில் உமக்கு என்னிடம் ஸம்வாதம் பெற முடியாது. இது ப்ரம்மமன்று. ஆதித்ய புருஷனிவன்; வெண்மை நிறமான கிரணங்களாம் வஸ்திரமுடையவன் ; ஸர்வ ப்ராணி 3