पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८३

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

20 இவனிட ஸங்கல்ப்பாதிகளுக்கும் ஆத்மா, விஜ்ஞானமயனென்ற ஜீவனுக்கும் அவனுள்ள எல்லாக் காலங்களுக்கும் ஆத்மா, தான் ஆனந்தமயன், தன்னிடத்திலே ஜீவர்களுக் கெல்லாம் மோக்ஷத்தில் லயத்தைச் செய் பவன்; இவனும் சேதநாசேதநங்களு மொன்றென்னவொண்ணாது. சேதநாசேதங்களுக்குள்ள வேற்றுமைகளெல்லாம் மணுகா. இறப்பும் பிறப்பு மிவனுக்கில்லை. உள் மட்டு மறிந்தவ னல்லன். வெளி வஸ்துவை மட்டுமறிந்தவனல்வன். தனக்கு உள் ளும் வெளியுமாக இரு பாகம் இருப்பதாக அறியாதவன். எங்கும் பரவும் அவனுடைய அறிவுக்கு எங்காவது தடை யுண்டாவது, அதனால் ஓரிடம் நெருக்கமாகவும், ஓரிடம் விரனமாயு மது இருப்பதெ ன்னப்படாதவன். ஜ்ஞானத்திற்கு இந்திரிய மில்லாதவன். ஆகிலும் ஜ்ஞானத்திற் குறைவற்றவன். ஜ்ஞானம் கழிந்ததென்றும், இனியே பிறக்கும் என்றும் சொல்ல வேண்டும் நிலையிலில்லாதவன். 6. இப்படியெல்லாம் வர்ணிக்கப்படும் மூலகாரணமான பா மாத்மா யாரென்னில், ஒரு வித குறையுமின்றி பரமபதத்திலே ஒப்பற்று விளங்கா நிற்கும் நாராயணனென்பவனே. முன்னே இந்திரியங்களுக்கும் விஷயங்களுக்கும் அந்தர்யாமியாகச் சொல்லப் பட்டவன் நாராயணனே. ஸ்ருஷ்டி முதலிய ஸர்வ கார்யங்களைச் செய்பவன் அந்த நாராயணனே. ஆதித்யர்கள், ருத்ரர்கள் என்றாற் போன்ற எல்லோரும் அவனே. காரணமும், உற்பத்தி ப்ரளயங் களுக்கு இடமானவனும் நாராயணனே.தாயும்,தந்தையும், உடன் பிறந்தாரும், வாஸஸ்தானமும், சரணமாகிறவனும், அன்பார்ந்த மனமுள்ளவனும், அடைய வேண்டியவனும் நாராயணனே. சுருங்கச் சொல்லில், இங்குள்ள எல்லாமவனே. மோக்ஷத்தை யாள்பவனும் அவனே. ஒரு பகலாய் உணர்த்தியேயான அந்த விஷ்ணுவின் பரமபதத்தை நித்யஸுரிகள் பார்த்த வண்ணமிருக் கின்றனர். விசேஷ அறிவைக் கொண்டு அவர்கள் வாயார வாழ்த்தி நன்குத் திகழ்ந்து விளங்கா நிற்கின்றனர். 7. பிறவியும் அழிவுமில்லாத அவனொருவனே உடலுள்ளே குகையில் மறைந்திருப்பவன். அவனுக்குப் பூமி உடல். அதனுள் அவனிருக்கின்றவன். அவனையது அறியாது. இங்ஙனமே ஜலம், தேஜஸ்ஸு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம்,சித்தம், அவ்யக்தம்,அக்ஷரம், ம்ருத்யு (தமஸ்ஸு) என்றாற்போன்றவையு