पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८७

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

இப்படி மனோவியாபரத்தைப் போலே, வாக்கு, ப்ராணன், கண், காது, மற்றும் கர்மேந்திரியம், வயிற்றினுள் இருக்கும் அக்கி என்பவற்றின் வியாபாரங்களையும் ஒவ்வொரு நாள் உள்ளவற்றை அக்கிஸ்தானம் முதலியனவாக பாவித்தல் உண்டு. இந்த அக்நிகள் வித்யாரூபமான க்ரதுவிலேயே உபயோகம் பெறுகிறன.(எம் பெருமாரனுக்குத் திருவாராதனம் செய்பவர் பாஹ்ய யாகத்தைச் செய்வதற்கு முன்னே ஹ்ருத்யாகம் செய்கின்றனர். அதே மிகச் சிறந்தது. அது போல் உடலைக் கொண்டு நடத்தும் க்ரதுவைக் காட்டிலும் மாநஸமான க்ரதுவே எம்பெருமானுக்கு உவப்பை மிக வளிக்குமென்க.) a 2.வைசவாநர வித்யை. ஸத்யஜ்ஞர் முதலான மஹர்ஷிகள் கௌதமரிடம் சென்று வைத்வாநரவித்யைப் பற்றி விசாரம் செய்து ஒன்றும் நிஷ்கர்ஷிக்க மாட்டாமே அவருடன் கூடவே கேகயதேசத் தாசனான அசவபதியை யண்டினர். அவர்களுக்குத் தனித்தனியே தங்குமிடங்கள், பூஜை, மரியாதைகளெல்லாம் செய்தான் அரசன். பொழுது விடிந்ததும் அவர்கள் அரசனை ஆசார்யனாக வரிக்க வேண்டும் உபஹாரத்துடன் தனித்தனியே வந்து சேர்ந்தனர். 'இஃதென்ன? தாங்கள் ஸாங்கமாக வேதங்களை ஓதினவர்கள். அத் தகையாரின் புதல்வர்கள். இப்படி வருவதென்' என்றான் அரசன். அவர்களும், வைச்வாநரவித்யையை அரசராகியதாங்கள் நன்கு அறிந் திருப்பதால் அதனை உபதேசமூலம் பெற இங்ஙனம் வந்துள்ளோம்' என்றனர். 'கொணர்ந்த பஹாரத்தை (ஸமித்தை) உங்களுக்கே கொள்ளுங்கள். வித்யையைச் சொல்லுகிறேன். கேளுங்கள்' என்றான் கேகயன். ஒவ்வொருவரையும் தனித்தனியே, 'இவ்வித்யை யில் நீங்களே விவாதப்பட்டு வந்திருக்கிறீர்களே. நீங்கள் எவ்வாறு தெரிந்துகொண்டிருக்கிறீர்களோ, அதனைக் கூறுங்கள்' என்றான். அவர்களில் யாரும் முழு வைச்வாநர ஸ்வரூபத்தை யறிந்தனரல்லர். வைச்வாநரஸ்வரூபியான ப்ரம்மத்திற்கு பூமியானது கால், ஜலம் மூத்ரஸ்தானம், ஆகாயம் நடுவுடல் (கடிப்ரதேசம்), காற்று ப்ரா ணன், சூரியன் கண், ஸுவர்க்கம் சிரஸ்ஸு எனவிருக்க அவர்கள் அவற்றில் ஒவ்வொன்றையே முழு வைச்வாநானாக நினைத்திருந் தனர். அந்நினைவுகளை நீக்கி, 'எல்லாவற்றையும் சேர்த்து அந்தந்த அவ்யவமாக பாவித்து த்யானம் செய்யுங்கள் என உபதேசித் தான். மீண்டும் மஹாராஜன் மொழிந்ததர்வது - இத்தகைய எ