पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८८

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

25 வைச்வநராத்மாவை ப்ராதேசபாத்ரமாக =ஒட்டைச்சாணளவாக்கிக் கொள்ள வேண்டும். எங்ஙனமெனில், கேண்மின். உபாஸிக்கிற வனுடைய தலையை வைச்வாநா புருஷனின் தலையாகவும், இவன் கண்களை அவன் கண்களாகவும், மூக்கை ப்ராணனாகவும், வாயி வள் இருக்கும் அவகாசத்தை அவனது நடுவுடலாகவும், அங் குள்ள ஜலத்தை அவனது நீராகவும், மோவாய்க்கட்டையை அவன் காலாகவும் பாவித்தல் வேண்டும். இப்படித் தலையினின்று மோவாய்க்கட்டைக்குள் அடக்கினதாலே வைச்வாநரன் ஓட்டைச் சாணானான். இந்த வைச்வாநரன் ஸா ஸ்த ஜீவர்களையும் நடத்துகிற வன்; உபாஸகனுடைய உடலிலே ஜாடராக்னிக்கு அந்தர்யாமியாக வுமிருக்கின்றான். என்றவாறு. (இந்த அக்னியில் பராணாக்கி ஹோத்ரம் செய்வது விரிவாகச் சாந்தோக்யத்திலே சொல்லப் பட்டது. சிற்சில அம்சங்களில் மாறுபாடு இருந்தாலும் சாந்தோக் யத்திற் சொன்னதும் இதுவும் ஒரே வித்யையாம். இதை யுபாஸிப் பவனுக்கு ம்ருத்யு விலகி மோக்ஷத்தில் பரமாந்தமான பெருமானைப் புசிப்பதே பெரும் பலனும்.) த 3. சாண்டில்ய வித்யை, "ஸத்யம் ப்ரம்மமென உபாஸிக்க வேண்டும். உலகினில் மனிதன் உபாஸனமயன். எவ்வாறு உபா ஸனை செய்து இவ்வுலகினின்று பிரிகிறான், அவ்வாறு மேலுலகில் பலனைப் பெறுகிறான். அவன் பரமாத்மாவை, பரிசுத்தமான மனத்தாலே க்ரஹிக்கத்தக்கவன், ப்ராணனை உடலாக உடையவன், ஒளி மிகு ஈடருடம்பன், ப்ரக்ருதியென்ற ஆகாயத்திற்கும் ஆத்மா, இஷ்டப்படி உருவம் கொள்பவன், மனேவேகமுள்ளவன், தடைப் படாத எண்ணமுடையவன், குலையாத தாங்கும் சக்தி வாய்ந்தவன், மணம் சுவைகளை எல்லாவகையிலுமுள்ளவன், எல்லாத் திக்குக் களிலும் பரந்தவன், எல்லா மங்கள குணங்களையும் தனக்கேயாக் கிக் கொண்டவன், எல்லா ப்ரஜைகளையும் தருணமாக நினைத்து ஒருவரோடும் பேசாமலிருக்கக்கூடியவன், ஒருவனை ஆதரித்தாக வேண்டியதொன்றுமில்லாதவன்; செல், யவை முதலான தானியங் களுக்கும் மிகச் சிறியவன், பொன்னிறத்தன், புகையற்ற நெருப் புப் போன்றவன், ஸ்வர்க்கம், ஆகாயம், பூமியென்றவாறுள்ள எல்லாவற்றையுங்காட்டிற் பெரியவன் ப்ராணலுக்கு ஆத்மா, எனக்கும் ஆத்மா. இவனையே யான் பிற்காலத்தில் அடையப் , 4