पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/९३

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

30 செய்வற்காக ஸ்ருஷ்டிக்கப் பெற்ற சிலராகலாம், ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் அஸ்த்ரபூஷணாத்யாயத்தில் அருளிச்செய்த படி இந்த ப்ரபஞ்சத்திய வஸ்துக்களுக்கு அபிமானி தேவதைகளாக அமர்ந்த நித்யஸுஅரிகளுமாகலார். யஜ்ஞமும் உண்மையில் நடத்தின துமாகலாம். அக்கிரஹஸ்யத்திற் கூறியவாறு த்யான ரூபமான யஜ்ஞமுமாகலார். அப்போது பிரமன் தன்னை ஹகிஸ்ஸாக நினைத்து மாநஸயாகம் செய்தானென்றதாதலால், தேவர்களென்றது அவ னுடைய இந்திரியங்களையாம். ஆனால் மேலே தேவர்கள் வேறு, ரிஷிகள் வேறெனத் தெளிவாதலால் ரிஷிகளை இந்திரியங்களென்றால் நவர்கள் வேறாவர்; பிரமனைப் போன்றார்க்குத் வேர்களாமவர் கள் பிரமன் தன்னையே பசுவாக்கி யாகம் செய்யவல்லவருமாவார். அந்த யாகத்திலே வஸந்தருது நெய்யாகவும்,ரீஷ்மருது ஸமித் தாகவும்,சரத்ருது நைவேத்யமாகவும் கருதப்பெற்றன. ப்ரீதிவீ, அப்பு,தேஜஸ்,வாயு,ஆகாசம்,அஹங்காரம், மஹத்து என்ற எழும் அக்கியைச் சுற்றி வைக்கும் பரிதிகளாயின. பஞ்சபூதங்கள், பஞ்ச தந்மாத்ரங்கள், பதினோரிந்திரியங்கள் ஆக இருபத்தொன்று, அன்றி, ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, புத்தி, அஹங் சித்தம், மனது என்ற நான்கு உள் இந்த்ரியங்கள், சரீரமாக அமைந்த ஐந்து பூதங்கள் ஆக இருபத்தொன்றாகுமவை ஸமித்துக் களாயின. முன் சொன்ன தேவர்கள் புருஷபசுவை யஜ்ஞத் திற்கென்று யூபத்திற்கட்டினார்கள்; ப்ரோக்ஷித்தார்கள். யஜ்ஞமும் செய்தனர். அாத்ய தேவசெனப்படும் நித்யரிகளும், இந்திரியங் முழுமையும் ஹோமமாகச் செய்யப்பட்ட பிரமனிடமிருந்து ப்ருஷதாஜ்பம் - விகித்ரமான ஆஜ்யம்,(தயிர் கலந்த நெய்) சேகரிக்கப் பெற்றது. நாடுகளில் நடமாடும் பசுக்களும், காடுகளிலே யிருக் கும் பசுக்களும் ஸ்ருஷ்டிக்கப்பட்டன. ருக்கு,ஸாமம், காயத்ரி முதலான சந்தஸ்ஸுக்கள், யஜுஸ் எல்லாம் உண்டாயின. இரு புறம் பற்களுள்ள குதிரைகளும் மற்றவைகளும், மாடுகளும், வெள்ளாடு செம்மறியாடுகளும் பிறந்தன. மனித ஸ்ருஷ்டியை எத்தனை விதமாகச் செய்தார்களென்றால் கான்கு விதமாகவென்க. முகத்தினின்றுபிராம்மணர்களும், கைகளினின்று சத்திரியர்களும், கடைகளினின்று வைச்யர்களும், கால் +னின்று சூத்ரர்களும்